cinema

img

முதல் நேரடி தமிழ் இணையத் தொடர் ‘மாய தோட்டா’

சஸ்பென்ஸ், அதிரடி கதையுடன் ஆறு அத்தியாய தொடர்  ஹங்காமாவில் தொடக்கம்!

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பொழுதுபோக்கு நிறுவனமான ஹங்காமா (Hungama), அதன் முதல் தமிழ் நேரடி இணையத் தொடரான ‘மாயத் தோட்டா’வை வெளியிடுகிறது. இந்தத் தொடரில் தமிழ் திரைத் துறையின் பிரபல  நட்சத்திரங்களான சைத்ரா ரெட்டி, அமித் பார்கவ்,  மற்றும் குமரன் தங்கராஜன் ஆகியோர் நடித் துள்ளனர். உயர் பாதுகாப்புக்கு மத்தியில் மர்மமான சூழ்நிலை யில் அமைச்சர் ஒருவர் படுகொலை செய்யப்படுவது டன் இந்த இணையத் தொடர் தொடங்குகிறது. இந்தக் கொடூரமான கொலையின் பின்னணியில் உள்ள உண் மையை வெளிக்கொணரும் போலீஸ் விசாரணை, நேரத்துடன் போட்டி போடும் ஒன்றாக மாறுகிறது. சஸ்பென்ஸ், அதிரடி, நாடகத்தன்மை ஆகிய வற்றுடன் நகத்தைக் கடிக்க வைக்கக்கூடியதாகவும், கணிக்க முடியாத முடிவையும் கொண்டு பின்னப் பட்டுள்ள ‘மாயத் தோட்டா’வின் கதை முழுமை யான ஓர் அனுபவத்தைத் தரும். நந்தகுமார் ராஜூ இயக்கியுள்ள இந்த இணையத் தொடரை, ஹங்காமா வுடன் இணைந்து மது அலெக்சாண்டர் மற்றும் பிரபு ஆண்டனி ஆகியோர் தயாரித்துள்ளனர். நிகழ்ச்சியைப் பற்றி ஹங்காமா டிஜிட்டல் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த்த ராய் கூறுகையில், “எங்களின் நேரடி நிகழ்ச்சிகளைக் கொண்ட விரிவான ஒரு தொகுப்பு மூலம் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை உருவாக்குவது, புதுமை செய்வது, வழங்குவதுதான் ஹங்காமா நிறுவனத்தின் நோக்கம். எங்களுடைய முதல் தமிழ் நேரடி இணையத் தொடரான மாயத் தோட்டாவின் மூலம், தென்னிந்தியா வில் எங்களின் தடத்தை விரிவுபடுத்தும் நோக்கில் ஒரு படி முன்னேறியுள்ளோம்.  

தமிழ் பிராந்திய சந்தையில் நாங்கள் நுழைந்திருக் கிறோம். பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நடிப்பு  மற்றும் அழுத்தமான கதைக்களம் ஆகியவற்றுடன் கூடிய இந்த இணையத் தொடரை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். பிராந்திய மக்கள், குறிப்பாக தெற்கில் உள்ள பார்வையாளர் களைக் கவரும் வகையில் முழுமையான பொழுது போக்கு சார்ந்த கூடுதல் நிகழ்ச்சிகளைத் தொடங்க நாங்கள் உத்தேசித்துள்ளோம்” என்றார். இயக்குநர் நந்தகுமார் ராஜூ கூறுகையில், “சஸ்பென்ஸ் மற்றும் அதிரடியை உள்ளடக்கிய கதை களை தெற்கில் உள்ள குடும்பப் பார்வையாளர்கள் அதிகம் பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட ஒன்றை அவர்க ளுக்கு வழங்குவதே எனது நோக்கமாக இருந்தது. பார்வையாளர்களை வியக்க வைக்கும், சிந்தனை யில் ஆழ்ந்துபோக வைக்கும் கதையைக் கொண்டது மாயத் தோட்டா. தனித்துவமான, வித்தியாசமான மற்றும் கவர்ச்சிகரமான கதைக்களத்தின் காரணமாக பார்வையாளர்களிடம் இது கூடுதல் ஆர்வத்தையும் பாராட்டுகளையும் பெறும் என்று நான் நம்புகிறேன். ஹங்காமாவின் முதல் நேரடி தமிழ் இணையத் தொடரை இயக்கும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்காலத்தில் அந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார். மாடலும் நடிகையுமான சைத்ரா ரெட்டி பேசுகை யில், “ஹங்காமாவின் முதல் தமிழ் நேரடி இணையத் தொடரில் இடம்பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகி றேன். சஸ்பென்ஸ் மற்றும் அதிரடியின் சரியான கல வையாக உள்ள மாயத் தோட்டாவில், கொஞ்சம் நகைச்சுவையும் உண்டு. தனிப்பட்ட முறையில், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிப்பது எனக்கு தன்னம் பிக்கையையும் புத்துணர்ச்சியையும் அளித்தது. உண்மையான குற்றவாளி யார் என்பதைத் தீர்மானிப் பதற்குள் பார்வையாளர்கள் கலவையான உணர்வு களுக்குள் சென்று திரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். நிகழ்ச்சியைப் பற்றிய பார்வையாளர் களின் ஆக்கபூர்வமான விமர்சனத்தை எதிர்நோக்கு கிறேன்.

இது அவர்களுக்கு ஒரு முழுமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார். ஆடியோபுக் பின்னணிக் குரல் கலைஞரும் பிரபல நடிகருமான அமித் பார்கவ் பேசுகையில், “சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி வகை இணையத் தொடர்கள் தமிழ் குடும்பப் பார்வையாளர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. மாயத் தோட்டாவின் ஈர்க்கக் கூடிய மற்றும் தனித்துவமான கதைக்களம் பார்வை யாளர்களை மேலும் மேலும் எதிர்பார்க்க வைக்கும். கதையின் ஒவ்வொரு திருப்புமுனையிலும், கதா பாத்திரத்துக்குள் ஆழமாக ஊடுருவிச் செல்வது உற்சாகம் தந்தது. சைத்ரா மற்றும் குமரனுடன் இணைந்து நடித்ததிலும் ஹங்காமாவின் முதல் தமிழ் நேரடி இணையத் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததிலும் நான் மகிழ்ச்சி யடைகிறேன்” என்றார். திறமையான நடிகரான குமரன் தங்கராஜன் கூறுகையில், “இந்த இணையத் தொடரின் மிகப்பெரிய திருப்புமுனைகளில் ஒன்றாக, அமைச்சரின் ரகசியங் களை அறிந்த ஒரு பாதுகாப்பு அதிகாரியாக நான் நடித்திருக்கிறேன். இந்தத் தொடர் நகரும் விதத்தை பார்வையாளர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அத்துடன் ஒவ்வொரு நகர்வும் கணிக்க முடியாததாக இருப்பது இந்த நிகழ்ச்சியின் தனித்தன்மை. ஹங்காமாவின் முதல் தமிழ் நேரடித் தொடரில் நடிப்பதும், அதன் ஒரு பகுதியாக நான் இருப்பதும் மிக முக்கியமானது. இந்தத் தொடர் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும், அதன் மாறுபட்ட கதைசொல்ல லுக்காகப் பாராட்டப்படும் என்றும் நம்புகிறேன்” என்றார்.